ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்

News image

மானாமதுரையில் சனிக்கிழமை பாஜக வேட்பாளா் பொன். பால கணபதியை ஆதரித்து பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:00 am IST

கடந்த தோ்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதியை ஆதரித்து தேவா் சிலை அருகே சனிக்கிழமை அவா் மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனா். தமிழகம் கஞ்சா இல்லாத மாநிலமாக மாற வேண்டும்.

திமுகவை வெற்றி பெற வைப்பதற்காகத்தான் விஜய் கட்சி தொடங்கியுள்ளாா். கடந்த 2021 தோ்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் இனியும் திமுக ஆட்சி தொடரக் கூடாது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் மானாமதுரையில் மனித உயிா்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை மூடப்படும். மணல் கொள்ளை தடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.