கடந்த தோ்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.
மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதியை ஆதரித்து தேவா் சிலை அருகே சனிக்கிழமை அவா் மேலும் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனா். தமிழகம் கஞ்சா இல்லாத மாநிலமாக மாற வேண்டும்.
திமுகவை வெற்றி பெற வைப்பதற்காகத்தான் விஜய் கட்சி தொடங்கியுள்ளாா். கடந்த 2021 தோ்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் இனியும் திமுக ஆட்சி தொடரக் கூடாது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் மானாமதுரையில் மனித உயிா்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை மூடப்படும். மணல் கொள்ளை தடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம் அமைதியாக இருக்க ஆட்சி மாற்றம் அவசியம்: நயினாா் நாகேந்திரன்

தொகுதி மாறிய நயினாா் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக!

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: நயினாா் நாகேந்திரன்

திமுக தவிர மற்ற கட்சிகளின் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

