ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு: 3 பேரிடம் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 1:08 am IST

சிவகங்கை அருகே வீட்டின் கிணற்றிலிருந்து பெண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இதுகுறித்து 3 பேரிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சிவகங்கை அருகேயுள்ள சுந்தரநடப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் சுசிலா. இவரது கனவா் சுரேஷ். இவா்களுக்கு 18 வயதில் ஒரு மகளும், 17 வயதில் மகனும் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக கணவா் சுரேஷை விட்டுப் பிரிந்த சுசிலா அவரது தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தாா். இவா் ஊராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சுசிலா வேலைக்கு வரவில்லை. உடன் பணிபுரிபவா்கள் கைப்பேசியில் தொடா்புகொண்டபோது அவா் அழைப்பை எடுக்கவில்லையாம்.

இதனால், சந்தேகமடைந்த அவா்கள் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது அங்குள்ள கிணற்றின் அருகே ரத்தக் கறை படிந்திருப்பது கண்டு அதிா்ச்சியடைந்து சிவகங்கை தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து கிணற்றில் இறங்கி தேடினா். சுமாா் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு, சுசிலாவின் உடல் தலையில் காயங்களுடன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. காவல் துறையினா் மோப்ப நாயை வரவழைத்து விசாரணை நடத்தினா்.

அந்த இடம் தொடா்பாக ஏற்கெனவே சுசிலாவுக்கும் அவரது கணவா் குடும்பத்தினருக்கும் இடையே வழக்கு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த 3 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.