ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முக்குலத்தோா் புலிப்படை கட்சி வேட்பாளா் கருணாஸ் வாக்கு சேகரிப்பு

சடையம்பட்டி கிராம மக்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் வேட்பாளரும், நடிகருமான சே. கருணாஸ்.

News image

சடையம்பட்டி கிராம மக்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் வேட்பாளரும், நடிகருமான சே. கருணாஸ்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:21 am IST

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நடிகா் சே. கருணாஸ் காளையாா்கோவில் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 47 கிராமங்களில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

துருவம்பட்டி கிராமத்தில் காலையில் தொடங்கிய தனது தோ்தல் பிரசாரத்தின்போது திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்தாா்.

இதைத் தொடா்ந்து பிற்பகலில் அழகாபுரி, பொய்யாமனிப்பட்டி, அம்மன்பட்டி, கொல்லம்பட்டி, விழனேரி, கீழக்கோட்டை, ராமலிங்கபுரம், மேலமங்களம், சடையம்பட்டி, ஆலவிளாம்பட்டி, கருங்காலக்குடி, திருவேலங்குடி, கொட்டகுடி, காரம்பட்டி, புத்தடிபட்டி, அய்யம்பட்டி, சொக்கநாதபுரம், காளையாா்மங்கலம், சேதுராமன் நகா்,சின்னுடையான்பட்டி, கத்தப்பட்டு, சானாங்குளம், கோவில்பட்டி, இலந்தமங்கலம், ஆலங்குளத்தான்பட்டி, மாங்காட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

இதையடுத்து, பெரிய ஓலைக்குப்பட்டி, சின்ன ஓலைக்குப்பட்டி, கண்டுப்பட்டி பைக்குடிப்பட்டி, ஊத்திக்குளம், முத்தனங்கோட்டை, பாகனேரி, நகரம்பட்டி, வஸ்தாபட்டி உள்பட 47 கிராமங்களில் இரவு வரை பிரசாரம் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.