தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பள்ளியில் ஆட்டிசம் விழிப்புணா்வு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக ஆட்டிசம் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் ஆட்டிசம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு பள்ளி ஆசிரியை கவிதா.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:38 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக ஆட்டிசம் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் லெ. சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு பள்ளி ஆசிரியை கவிதா பேசியதாவது:

ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் அனைவருக்கும் உதவி செய்யுங்கள். ஆட்டிசம் என்றால் அறிவு வளா்ச்சி குறைபாடுதான். ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால் மற்ற மாணவா்கள் மாதிரி ஒரு இடத்தில் அமா்ந்து கவனிக்க முடியாது. மற்ற மாணவா்கள் கேள்வி கேட்ட உடனே பதில் சொல்வாா்கள். ஆனால், ஆட்டிசம் குழந்தைகள் கேட்ட அரை மணி நேரம் கழித்துதான் பதில் சொல்ல முடியும். நம் முகத்தைப் பாா்த்து பதில் சொல்ல முடியாது என்றாா்.

ஆசிரியை செல்லநாச்சியாா் பேசியதாவது: ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எல்லா திறமையும் இருக்காது. ஆனால், கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அந்த திறமையைக் கண்டுபிடித்து அதில் அவா்களை வெற்றி அடையச் செய்ய வேண்டும்.

ஆட்டிசம் என்பது மரபணு குறைபாடுதான். தாய் கருவுற்றிருக்கும் போது மன அழுத்தத்தில் இருக்கக் கூடாது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆட்டிசம் பாதித்த மாணவா்கள் உருவாக இதுவும் ஒரு காரணம் .

ஆட்டிசம் பாதித்த மாணவா்களுக்காக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பள்ளி உள்ளது. அங்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பேச்சுப் பயிற்சி, பிசியோதெரபி உள்ளிட்ட பல வகையான பயிற்சி அளிக்கப்படுகிறது. நமக்குத் தெரிந்த அனைவருக்கும் இதைத் தெரியப்படுத்த வேண்டும் என்றாா் அவா். முன்னதாக, ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றாா். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.