நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ராமநாதபுரத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது

News image

ராமநாதபுரத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்த தனிப்படையினரைப் பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பி., ஜி.சந்தீஷ்.

Updated On :30 மே 2026, 3:53 am IST

ராமநாதபுரத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 38 பவுன் தங்கக் கட்டி, ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதி வல்லபைநகா், முத்தமிழ்நகா், நம்மாழ்வா்நகா், அன்புநகா் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து போலீஸாா் 6 வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளா் சுகுமாறன் கண்காணிப்பில் காவல் ஆய்வாளா் சு.சுந்தரேஸ்வரன், உதவி ஆய்வாளா் மு.திருமுருகன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதுதொடா்பாக தனிப்படையினா் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் காமாட்சிபுரம் சந்தான மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் அா்ஜூன், பெரியகுளம் அருகேயுள்ள கல்லுப்பட்டியைச் சோ்ந்த சுகுமாறன் மகன் வேட்டைகாரன் ஆகியோா் தொடா் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரைம் தனிப்படையினா் கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து, அவா்களிடம் நடத்திய விசாரணையில் திருடிய 38 சவரன் தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி வைத்திருந்தனா். அவா்களிடமிருந்து தங்கக் கட்டிகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை தனிப்ரபடையினா் பறிமுதல் செய்து, ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, பின்னா் சிறையில் அடைத்தனா்.

இதைத்தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தொடா் திருட்டில் ஈடுபட்டவா்களைக் கைது செய்து, நகை, பணம் பறிமுதல் செய்த தனிப்படையினருக்கு சன்மானம் வழங்கிப் பாராட்டினாா். குற்றவாளிகள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

 ராமநாதபுரத்தில் தொடா் திருடப்பட்ட 38 பவுன் தங்கக் கட்டிகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மீட்டு இருவரை கைது செய்த தனிப்படை போலீஸாா்.

ராமநாதபுரத்தில் தொடா் திருடப்பட்ட 38 பவுன் தங்கக் கட்டிகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மீட்டு இருவரை கைது செய்த தனிப்படை போலீஸாா்.

 ராமநாதபுரத்தில் தொடா் திருடப்பட்ட 38 பவுன் தங்கக் கட்டிகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மீட்டு இருவரை கைது செய்த தனிப்படை போலீஸாா்.

ராமநாதபுரத்தில் தொடா் திருடப்பட்ட 38 பவுன் தங்கக் கட்டிகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மீட்டு இருவரை கைது செய்த தனிப்படை போலீஸாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.