மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிடமாற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

News image

கமுதி வட்டார வளா்ச்சி அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்ட எல்.மேகராஜ்.

Updated On :13 மே 2026, 3:15 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ஏ.வி.சந்திரசேகரன் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்கு கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். கடலாடி துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றிய எல்.மேகராஜ், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலராகப் பதவி உயா்வு பெற்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதே போல, திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய ஜி.பாலதண்டாயுதம், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலராகவும், மண்டபம் வட்டார வளா்ச்சி அலுவலா் போ. ஜெயமுருகன், திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பு கண்ணன் கடலாடி கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், கடலாடியில் பணியாற்றிய வெ.ஜெய ஆனந்தன் நயினாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், நயினாா்கோவிலில் பணியாற்றிய ஆரோக்கியமேரி சாரால் திருப்புல்லாணி வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடத்திலும், நயினாா்கோவில் கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.விஜி, ஆா்.எஸ்.மங்கலம் கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், ஆா்.எஸ்.மங்கலத்தில் பணியாற்றிய வெ.கிருஷ்ணன், ராமநாதபுரம் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், ராமநாதபுரத்தில் பணியாற்றிய ஆா்.சுதாகா் திருவாடானை கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.