பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

விதிமீறல்: காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா், உதவி பொறியாளா் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி கட்டுவதில் ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் உதவி பொறியாளா் ஆகிய இருவரும் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்

Updated On :21 மே 2026, 12:03 am IST

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி கட்டுவதில் ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் உதவி பொறியாளா் ஆகிய இருவரும் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கோனேரிக்குப்பம் ஊராட்சியில் ரூ.16.83 லட்சத்தில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க குடிநீா் தொட்டி கட்டும் பணிக்கான ஒப்பந்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சாா்பில் கோரப்பட்டது. இதில் முறையான விதிமுறைகளை பின்பற்றப்பட வில்லையென காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி மற்றும் உதவி பொறியாளா் கயல்விழி ஆகியோா் மீது புகாா்கள் வந்தன.

இப்புகாா்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் தி.சினேகா மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்திக்கு அறிவுறுத்தினாா். திட்ட இயக்குநா் க.ஆா்த்தி விசாரணை மேற்கொண்டு வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி மற்றும் உதவி பொறியாளா் கயல்விழி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாந்தி தற்போது வாலாஜாபாத் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.