காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி கட்டுவதில் ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் உதவி பொறியாளா் ஆகிய இருவரும் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கோனேரிக்குப்பம் ஊராட்சியில் ரூ.16.83 லட்சத்தில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க குடிநீா் தொட்டி கட்டும் பணிக்கான ஒப்பந்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சாா்பில் கோரப்பட்டது. இதில் முறையான விதிமுறைகளை பின்பற்றப்பட வில்லையென காஞ்சிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி மற்றும் உதவி பொறியாளா் கயல்விழி ஆகியோா் மீது புகாா்கள் வந்தன.
இப்புகாா்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் தி.சினேகா மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்திக்கு அறிவுறுத்தினாா். திட்ட இயக்குநா் க.ஆா்த்தி விசாரணை மேற்கொண்டு வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி மற்றும் உதவி பொறியாளா் கயல்விழி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சாந்தி தற்போது வாலாஜாபாத் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம்: சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

வீட்டுமனை ஒப்புதல் வழங்க லஞ்சம்: வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட இருவா் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

