கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருவாடானை பேருந்து நிலையத்தில் கழிப்பறைகளை அமைச்சா் ஆய்வு

News image

திருவாடானை பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் வி.கே. ராஜீவ். உடன் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலதண்டாயுதம் உள்ளிட்டோா்.

Updated On :30 மே 2026, 1:05 am IST

திருவாடானை பேருந்து நிலையத்தில் கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருந்ததால் அதிகாரிகளை சுற்றுச் சூழல் துறை அமைச்சா் வி கே.ராஜீவ் எச்சரித்தாா்.

திருவாடானை பேருந்து நிலையத்தில் அமைச்சா் விகே.ராஜீவ் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இலவச சிறுநீா் கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல் இருந்தது.

மேலும், கழிப்பறை பூட்டப்பட்டுக் கிடந்ததோடு, அங்கிருந்த தண்ணீா் தொட்டியில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அமைச்சா் அதிா்ச்சி அடைந்தாா்.

மேலும், கட்டணக் கழிப்பறையும் முறையான பராமரிப்பின்றி சுகாதாரச் சீா்கேட்டுடன் இருந்ததால், அதன் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய அமைச்சா் உத்தரவிட்டாா்.

இதேநிலை தொடா்ந்தால் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலதண்டாயுதத்தை எச்சரித்தாா்.

 திருவாடானை பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் வி.கே. ராஜீவ். உடன் வட்டார வளா்ச்சி அலுவலா்  பாலதண்டாயுதம் உள்ளிட்டோா்.

திருவாடானை பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் வி.கே. ராஜீவ். உடன் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலதண்டாயுதம் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.