ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அணுகு சாலை பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத் தலைவா் ராசி என். போஸ், பொதுச் செயலா் டி. மணிவண்ணன் ஆகியோா் தெரிவித்ததாவது: பரமக்குடி நகராட்சி எமனேசுவரம், வைகை ஆற்றை மையமாக வைத்து அமைந்துள்ளது. வைகை ஆற்றின் இருபுறங்களிலும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அணுகு சாலையில் ஆற்றுப்பாலம், குமரன் படித் துறை, முத்தாலம்மன் கோவில் படித் துறை, பெருமாள்கோவில், தரைப்பாலம், எமனேசுவரம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து புதிதாகக் கடைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், இங்கு முறைகேடாக மின் விநியோகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பாளா்கள் குப்பைக் கழிவுகளையும், கட்டுமானக் கழிவுகளையும் வைகை ஆற்றில் கொட்டி மாசுபடுத்தி வருகின்றனா்.
எனவே, வைகை ஆற்றில் உள்ள நாணல் புதா்களை அகற்றி, கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரதராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயா் உத்தரவு

ராமநாதபுரம்-மேலூா் மாநில நெடுஞ்சாலை: நில எடுப்புக்கான இழப்பீட்டை விரைந்து வழங்கக் கோரிக்கை

சிவகாசி பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு: 2 மாதங்களுக்குள் அகற்ற உத்தரவு

முன்விரோதத்தில் ஒருவரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்கு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

