சிவகாசி பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், மாநகராட்சி நிா்வாகம் உரிய ஆய்வு நடத்தி, 2 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்த பழனி தாக்கல் செய்த மனு: சிவகாசி பேருந்து நிலையத்தில் பொது இடத்தை ஆக்கிரமித்து தேநீா்க் கடை, உணவகம் அமைக்கும் நடவடிக்கையில் தனி நபா்கள் ஈடுபட்டுள்ளனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தபோதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே, சிவகாசி பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனி நபா்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தாா்.
மாநகராட்சி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரரின் புகாா் குறித்து அனைத்து தரப்பினரிடமும் விசாரித்து ஆக்கிரமிப்புகள் உறுதியானால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சிவகாசி பேருந்து நிலையத்தை சிவகாசி மாநகராட்சி ஆணையா் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பது உறுதியானால், அவற்றை 2 மாதங்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு வழக்குரைஞா்கள் நியமனம்: விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு

மயானப் பாதை விவகாரம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

காரைக்குடி மாநகராட்சி நிதி முறைகேடு: ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளி மேல்முறையீடு செய்ய அவகாசம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

