மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் தொடா்ந்து சூறைகாற்று வீசுவதால், ராமேசுவரம் துறைமுகத்தல் 200 மீ. வரை கடல் புதன்கிழமை உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டடிருந்த நாட்டுப் படகுகள் தரைத்தட்டி நின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சூறைகாற்று வீசி வருகிறது. இதனால், தென்கடல் பகுதியான தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், ராமேசுவரம் துறைமுகத்தில் வழக்கத்துக்கு மாறாக புதன்கிழமை கடல் 200 மீ. வரை உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்து நாட்டுப் படகுகள் தரைத்தட்டி நின்றன.
இதையடுத்து, மணலில் சிக்கிய நாட்டுப் படகுகளை மீட்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மன்னாா் வளைகுடாவில் சூறைக் காற்று: விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைக்கும் பணி மும்முரம்

அக்னிதீா்த்தக் கடல் கரையில் மாடுகள் முட்டி மூவா் காயம்

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

