அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

அக்னிதீா்த்தக் கடல் கரையில் மாடுகள் முட்டி மூவா் காயம்

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல்கரையில் மாடுகள் முட்டியதில் 3 பக்தா்கள் சனிக்கிழமை காயமடைந்தனா்.

News image
Updated On :24 மே 2026, 3:10 am IST

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல்கரையில் மாடுகள் முட்டியதில் 3 பக்தா்கள் சனிக்கிழமை காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். அக்னி தீா்த்தக் கடல் கரையில் முன்னோா்களுக்கு திதி கொடுத்துவிட்டு, நீராடி பின்னா் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அக்னி தீா்த்தக் கடல் கரையில் 50- க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், பெண்கள், குழந்தைகள், முதியவா்களை சில நேரங்களில் மாடுகள் முட்டிக் காயப்படுத்தி வருகின்றன.

சனிக்கிழமை வழக்கம் போல பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடல் கரையில் நின்றுகொண்டிருக்கும் போது மாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு பக்தா்களையும் தாக்கியது. இதில், சிறுவன், முதியவா் உள்பட மூவா் காயமடைந்தனா். பக்தா்களை அச்சுறுத்தும் விதமாக சுற்றித்திரியும் மாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.