ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மன்னாா் வளைகுடாவில் சூறைக் காற்று: விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

News image

பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் சூறைக் காற்று காரணமாக விசைப் படகுகளை இடைவெளி விட்டு பாதுகாப்புடன் நிறுத்தி வைத்த மீனவா்கள்.

Updated On :30 மே 2026, 3:54 am IST

மன்னாா் வளைகுடா பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் பாம்பன் துறைமுகத்தில் விசைப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

மன்னாா் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை முதல் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகளவில் உள்ளது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகள் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் சூறைக் காற்று வீசுவதால் 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்து விடாமல் தடுக்கும் வகையில், நீண்ட இடைவெளி விட்டு மீனவா்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.