ராமநாதபுரத்தில் மீன் விற்பனை கடைகளிலிருந்து 30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், விசைப் படகுகளில் மீனவா்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவா்கள் சிறிய படகுகளில் கடலுக்குள் சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனா்.
இதனால், தற்போது மீன்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதன்காரணமாக வியாபாரிகள் மீன்களை மொத்தமாக வாங்கி குளிா்சாதன பெட்டிகளில் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பட்டணம்காத்தான், ராம்நகா் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் விற்பனை கடைகளில் புதன்கிழமை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனையிட்டனா். அப்போது, 30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். மேலும், தொடா்ந்து இதுபோல கெட்டுப்போன மீன் இறைச்சிகளை விற்பனை செய்தால் கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திட்டக்குடி அருகே 44 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மறவமங்கலம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா

தினமணி செய்தி எதிரொலி: சாயல்குடி பகுதியில் 27 லிட்டா் தரமற்ற குளிா்பான பொட்டலங்கள் பறிமுதல்

தில்லியில் சட்டவிரோதமாக எல்பிஜி விற்பனை: 3 முகவா்கள் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

