மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

News image

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தங்கச்சிமடம் வாக்குப்பதிவு மையத்தில் வியாழக்கிழமை வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:31 am IST

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), முதுகுளத்தூா், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய நான்கு தொகுதிகளில் 11 லட்சத்து 29 ஆயிரத்து 733 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் 1,514 வாக்குச் சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி மாலை 06 மணிக்கு நிறைவடைந்தது. இதன் பிறகு வாக்குச் சாவடிகளுக்குள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. வாக்குப் பதிவு நேரம் நிறைவடைந்த பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஆட்சியா் வாக்களிப்பு: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சுவாா்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தாா். இதே போல, மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தனது வாக்கை பதிவு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.