காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு சோ்க்கப்பட்டன.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில், 181 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யக்கூடிய விவிபாட் இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் உள்ளிட்டவை அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தின் பாதுகாப்பு அறையில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வைக்கப்பட்டிருந்தன.
மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி முன்னிலையில் பாதுகாப்பு அறை சீல் புதன்கிழமை பிற்பகல் அகற்றப்பட்டு, இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடி அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் செல்வதற்கு தனித்தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய பாதுகாப்புப் படையினா், போலீஸாா் பாதுகாப்புடன் இவை அந்தந்த சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருச்செந்தூா் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

தேனி மாவட்டத்தில் 1,403 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

300 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

