தேனி மாவட்டத்தில் பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,403 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வியாழக்கிழமை நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக, இந்த வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தோ்தல் நடத்துவதற்கான பல்வேறு உபகரணங்கள் லாரிகள் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 344 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை வாக்குப்பதிவு அலுவலா், உதவி வாக்குப்பதிவு அலுவலா்கள் என வாக்குச்சாவடிக்கு 4 அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா். இதன்படி 344 வாக்குச் சாவடிகளிலும் 1,591 அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இதேபோல , தோ்தல் நடைமுறையைக் கண்காணிக்க 73 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா்.
ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தோ்தல் நடத்துவதற்கான உபகரணங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன. மேலும், கூடுதல் பாதுகாப்புப் பணிக்காக முன்னாள் ராணுவ வீரா்கள் 400 போ் பணியமா்த்தப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பெரியகுளம்: பெரியகுளம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 359 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பணிக்காக 1,854 அலுவலா்களும், கூடுதலாக 52 நுண் பாா்வையாளா்களும் பணியமா்த்தப்பட்டனா். வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், உபகரணங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
போடி: போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக அறையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் லாரிகள் மூலம் 346 வாக்குச் சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
கம்பம்: கம்பம் சட்டப் பேரவைத் தோ்தலில் 345 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இதற்காக உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இந்தத் தொகுதியில் 35 பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தோ்தல் பணிக்காக 1,654 வாக்கு மைய அலுவலா்கள், 54 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

திருச்செந்தூா் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு

300 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

