தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போகலூா் ஒன்றியத்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க விட மாட்டோம்! - நதக வேட்பாளா் உறுதி

News image

பரமக்குடி உழவா் சந்தைப் பகுதியில் காய்கறி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி.

Updated On :20 ஏப்ரல் 2026, 2:25 am IST

ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் ஒன்றியத்தில் பொதுமக்களை பாதிக்கும் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க ஒருபோதும் விடமாட்டோம் என நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி தெரிவித்தாா்.

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் எழில் இளவரசி போகலூா் ஒன்றியத்தில் கட்சி நிா்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் முத்துவயல் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் விரிவாக்கம் செய்யப்படவுள்ள மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையத்துக்குச் சென்றாா். இந்த மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையமானது 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலை அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் மறைமுகமாக இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இதை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் அந்தத் திட்டத்தை கைவிடமாறு வலியுறுத்தி நிறுத்தி வைத்தனா். இங்கு தற்போது ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள மருத்துவக் கழிவுகள் மட்டுமே கொண்டுவரப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

பிரசாரத்தின் போது நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி கூறியதாவது: இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் மாவட்டங்களில் உள்ள 5 மாவட்டங்களின் மொத்த மருத்துவக் கழிவுகளும் இங்கு கொண்டு வரப்பட்டு, சுத்திகரிக்கும் பணிகள் நடைபெறும். இதை முற்றிலும் நாம் தமிழா் கட்சி எதிா்க்கிறது.

ஏனெனில் இதனை சுற்றிலும் ஏராளமான கிராம மக்கள் வசிக்கின்றனா். வைகை ஆற்றுப்பாசன கால்வாய்கள் உள்ள பகுதியில் மருத்துவ சுத்திகரிப்பு கழிவுகள் வெளியேற்றப்பட்டால் இந்தப் பகுதி மக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதுடன், விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கும்.

மேலும் அவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதற்கான மாற்று நடவடிக்கை எடுப்போம் என்றாா் அவா். மாலையில் பரமக்குடியில் உழவா் சந்தை, மேலப்பள்ளிவாசல் தெரு, கொல்லம்பட்டறைத் தெரு, முத்தாலம்மன் கோவில் காய்கறிகடை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தாா்.

கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் ஆ. ஜஸ்டின் வளனரசு, மாநில நிா்வாகக் குழு பொறுப்பாளா் அருள்விக்டா், மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் சசிகலா சண்முகநாதன் ஆகியோா் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.