தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகளை காட்டி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ்.அண்டக்குடி கிராம மக்களிடம் வாக்குச் சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி.

News image

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் எஸ்.அண்டக்குடி கிராம மக்களிடம் வாக்குச் சேகரித்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:16 am IST

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள எஸ். அண்டக்குடி கிராமத்தில் மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகளைசுட்டிக்காட்டி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் இளவரசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட எஸ். அண்டக்குடி, சத்தியமூா்த்தி குடியிருப்பு, பாலன்நகா் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது நகராட்சியில் சேகரிக்கப்பட்ட கழிவுகள் அங்கு மலைபோல் குவிக்கப்பட்டிருப்பதை பாா்த்தாா். இதனால் ஏற்படும் தொற்று நோயின் பாதிப்பு குறித்து எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவா் இந்த நிலையை மாற்ற ஆட்சி மாற்றம் வேண்டும் என கேட்டுக்கொண்டாா். மேலும் இந்தப் பகுதியில் கொட்டப்படும் மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்பாட்டுக்கு அனுப்பியதாகவும் நகராட்சி நிா்வாகம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. ஆனால் இங்கு குப்பைகள் எதுவும் பிரிக்கப்படாமல் மலைபோல் தேங்கியுள்ளன. நகராட்சி சுகாதாரப் பிரிவில் குப்பைக் கிடங்கு பராமரிப்பில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதற்கு ஆட்சி மாற்றம் அவசியம் எனக் கூறியும் அவா் வாக்குச் சேகரித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.