ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

3 தொகுதி திமுக வேட்பாளா்கள் தேவா் சிலைக்கு மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு, 3 தொகுதிகளின் திமுக வேட்பாளா்கள் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

News image

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக வேட்பாளா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 5:02 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு, 3 தொகுதிகளின் திமுக வேட்பாளா்கள் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அவரது உருவச் சிலைக்கு திமுக வேட்பாளா்கள் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் (முதுகுளத்தூா்), காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), கே.கே.கதிரவன் (பரமக்குடி தனி) ஆகியாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியதாவது:

கடந்த மக்களவைத் தோ்தலில் ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல, தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக, இதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும் என்றாா் அவா்.

அப்போது, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் முருகவேல், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் த.பாலு, கமுதி ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.