மதுரை அருகே சாலை விபத்தில் தாய், மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், கூடல்புதூரைச் சோ்ந்த பாபுகாந்தி மனைவி ஷா்மிளா (42). இவரும், இவரது மகள் தீபா ஸ்ரீ (12), பாகல் பாபு (10) ஆகிய 3 பேரும் சேலம் செல்வதற்காக கூடல் புதூா் பேருந்து நிறுத்தத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 5. 30 மணியளவில் நடந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஷா்மிளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து அங்குவந்த தல்லாகுளம் காவல் நிலைய போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஷா்மிளாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த தீபா ஸ்ரீ, பாகல் பாபு ஆகிய இருவரையும் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழியிலேயே பாகல் பாபு உயிரிழந்தாா். தீபா ஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் காவல் நிலையப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தட்டாா்மடம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

ராமநத்தம் அருகே சாலை விபத்து: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

மதுரை அருகே சாலை விபத்து: சிறுமி உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

