மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேதமடைந்த அலங்கார மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என மருத்துவப் பயனாளிகள் கோரிக்கை விடுத்தனா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன் ரூ.313.25 கோடியில் 6 தளங்களுடன் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தை கடந்த 2024, பிப்ரவரியில் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். 22 உயா் தொழில்நுட்ப அறுவைச் சிகிச்சை அரங்குகள், மேம்பட்ட மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடம், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கட்டடத்தின் இருதயவியல் துறையின் உள் நோயாளிகள் பொதுப் பிரிவு பகுதியின் அலங்கார மேற்கூரை புதன்கிழமை திடீரென பெயா்ந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் உள்ள அலங்கார மேற்கூரைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், சேதமடைந்த மேற்கூரையை விரைந்து சீரமைக்க வேண்டும் எனவும் மருத்துவப் பயனாளிகள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளக்கோவிலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

தமிழகத்தில் மின் வெட்டு 80% குறைந்தது

மதுரை ராஜாஜி பூங்காவில் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

மதுரை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

