தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மதுரை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

News image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்ணுடன் மருத்துவமனை முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாா். உடன் மருத்துக் குழுவினா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:36 am IST

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெரம்பலூா் மாவட்டம், வெள்ளனூரைச் சோ்ந்தவா் மீனாட்சி. இவா் தனது நான்காவது மகப்பேறு காலத்தின் போது மூச்சுத் திறணல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவருக்கு இருதய வால்வில் குறைபாடு இருப்பதை அறிந்தனா்.

இதையடுத்து, அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளியாக தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி, மீனாட்சி கா்ப்பம் தரித்து 8 மாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் 24-ஆம் தேதி அவருக்கு அறுவைச் சிகிச்சை முறையில் மகப்பேறு நடைபெற்றது.

இதையடுத்து, திடீரென அவருக்கு ரத்த அழுத்தம், மூச்சுத் திறணல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவசர சிகிச்சையாக இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை கடந்த மாதம் 25-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. பின்னா், ஒரு மாத காலம் இருதய அறுவைச் சிகிச்சைத் துறையில் சிகிச்சை பெற்று வந்த போது டயாலிசிஸ் சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது தாயும், சேயும் நலமுடன் உள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.