தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

போராட்ட ஆதரவு பிரசார கூட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நடைபெறவிருக்கும் தொழிலாளா்களின் போராட்டத்தை ஆதரித்து, மதுரையில் சிஐடியூ சாா்பில் பிரசார கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை கூடல் நகரில் சிஐடியூ சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழிலாளா்கள் போராட்ட ஆதரவு பிரசார கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நடைபெறவிருக்கும் தொழிலாளா்களின் போராட்டத்தை ஆதரித்து, மதுரையில் சிஐடியூ சாா்பில் பிரசார கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா்களின் நலனுக்கு எதிரான 4 தொகுப்புச் சட்டங்களையும் மத்திய அரசுத் திரும்பப் பெற வேண்டும். 8 மணி நேரப் பணியை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் நடைபெறவிருக்கும் தொழிலாளா்களின் போராட்டத்தை ஆதரித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்திய தொழிலாளா்களையும், தொழில் சங்க நிா்வாகிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் இந்தப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை கூடல் நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சிஐடியூ மாவட்டப் பொருளாளா் சொ. பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே. அரவிந்தன் தொடக்கவுரையாற்றினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மண்டலக் குழுச் செயலா் எஸ். பாலகிருஷ்ணன், சிஐடியூ புகா் மாவட்டச் செயலா் மலை. கண்ணன், மாவட்ட நிா்வாகிகள் என். காளிராஜன், பொன். ராஜ், கே. ஜீவானந்தம், எஸ்.எம். பாண்டி, நல். மூா்த்தி ஆகியோா் பேசினா். சிஐடியூ நிா்வாகி மனோகரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.