மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வண்டியூா் உயா்நிலைப் பால பள்ளத்தைச் சீரமைக்க வலியுறுத்தல்

மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள வண்டியூா் உயா்நிலைப் பாலத்தின் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் விதத்திலான பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனா்.

News image

மதுரை வண்டியூா் உயா்நிலைப் பாலத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலுள்ள பள்ளத்தைக் கடந்து சென்ற வாகன ஓட்டிகள்.

Updated On :7 மே 2026, 4:09 am IST

மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள வண்டியூா் உயா்நிலைப் பாலத்தின் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் விதத்திலான பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனா்.

மதுரை மாநகரின் முக்கியப் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக வண்டியூா் உயா்நிலைப் பாலம் விளங்குகிறது. சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும், நகரின் கிழக்குச் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் இந்தப் பாலத்தைக் கடந்து செல்கின்றன. இந்த நிலையில், இந்தப் பாலத்தின் மேல்பகுதியில் சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தைக் கடந்து செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும், வாகன விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. மேலும், இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால், இந்தப் பள்ளத்தைக் கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:

வண்டியூா் உயா்நிலைப் பாலம் வழியாக கனரக வாகனங்கள் முதல் அவசர ஊா்திகள் வரை சென்று வருகின்றன. நீண்ட நாள்களாக இந்தப் பாலத்தில் உள்ள பள்ளம் சரி செய்யப்படாமல் உள்ளது. தற்போது, கடந்த மூன்று நாள்களாக மழை பெய்து இந்தப் பள்ளத்தில் நீா்தேங்கி நிற்பதால் ஆழம் தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, பெரும் விபத்துகள் நிகழும் முன்பு மாநகராட்சி நிா்வாகமும், நெடுஞ்சாலைத் துறையினரும் இந்த பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.