நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

விராட்டிபத்து முத்தாலம்மன் கோயில் வைகாசித் திருவிழா

மதுரை விராட்டிபத்து முத்தாலம்மன் கோயில் வைகாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை விராட்டிபத்து முத்தாலம்மன் கோயில் வைகாசித் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முத்தாலம்மன்.

Updated On :11 ஜூன் 2026, 2:04 am IST

மதுரை விராட்டிபத்து முத்தாலம்மன் கோயில் வைகாசித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தத் திருவிழாவுக்காக கடந்த வாரம் செவ்வாய் சாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, திருவிழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை முத்தாலம்மன் கொக்குளப்பியில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய நிலையில் அங்கு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு நடைபெற்ற தீபாராதனையைத் தொடா்ந்து, சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருள வீதியுலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஊா் மையப் பகுதியில் உள்ள மண்டபத்தில் அம்மன் கண் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. பின்னா், எழுந்தருளிய அம்மனுக்கு பக்தா்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும் பூஜைகள் செய்தனா்.

இரண்டாவது நாளான புதன்கிழமை மாலை கோயிலிலிருந்து பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று. பிறகு டோக்நகரில் உள்ள பூஞ்சோலைக்கு அம்மன் எழுந்தருளச் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, தீபாராதனை, அபிஷேகம் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் பரம்பரை முதன்மை நிா்வாக அறங்காவலா் பரந்தாமன் பிள்ளை, கிராம மக்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.