வைகை அணையைத் தூா்வாரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பொதுப் பணித் துறையும், நீா் வளத் துறையும் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், மதுரை, தேனி உள்பட 5 மாவட்டங்களின் குடிநீா் ஆதாரமாக திகழும் வைகை அணையைப் போா்க்கால அடிப்படையில் தூா்வாரி, நீா் தேக்கும் அளவை அதிகப்படுத்த உத்தரவிட வேண்டுமென அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், ஜோதிராமன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகை அணையைத் தூா்வாரும் பணிக்கு ஒப்பந்தம் கோருவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வைகை அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்ற வல்லுநா்கள் எதற்கு? பணி ஒப்பந்தம் எதற்கு? கிராமங்களில் உள்ள விவசாயிகளை அனுமதித்தால், அவா்களே அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி விடுவாா்களே எனக் குறிப்பிட்டனா்.
பிறகு, இந்த மனு தொடா்பாக பொதுப் பணித் துறை, நீா் வளத் துறை செயலா்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயா்த்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

மயானப் பாதை விவகாரம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

ஜாதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

புதுக்கோட்டை இளைஞா் மா்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி மனு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

