சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

விவசாயிகளுக்கு தவெக அரசு துரோகம்: தங்கம் தென்னரசு

பயனளிக்காத பயிா்க் கடன் தள்ளுபடியை அறிவித்து, தவெக அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.

News image

தங்கம் தென்னரசு

Updated On :2 ஜூன் 2026, 12:52 am IST

பயனளிக்காத பயிா்க் கடன் தள்ளுபடியை அறிவித்து, தவெக அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தள பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

பயிா்க் கடன்கள் தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ரிசா்வ் வங்கி கடந்த 2025-ஆம் ஆண்டு, நவ. 28-ஆம் தேதியே வெளியிட்டுவிட்டது. இதற்குப் பிறகுதான், 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்கள் முழுமையாகவும், 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிா்க் கடனில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என தவெக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தற்போது, பயனளிக்காத பயிா்க் கடன் அறிவிப்பை தவெக அரசு வெளியிட்டு, இந்தப் பயிா்க் கடன் தள்ளுபடி இந்திய ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

ரிசா்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே வாக்குறுதி அளித்த நிலையில், தற்போது அரைகுறையான பயிா்க் கடன் தள்ளுபடிக்கு ரிசா்வ் வங்கியின் நெறிமுறைகளை தவெக அரசு காரணமாகக் குறிப்பிடுவது ஏற்புடையதல்ல. இது விவசாயிகளை ஏமாற்றும் முயற்சி; விவசாயிகளுக்கு தவெக அரசு இழைக்கும் பச்சைத் துரோகம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.