மதுரை மாவட்டத்தில் மொத்தம் 80.47 சதவீத வாக்குகள் பதிவாகின.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் முற்பகல் வரை விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. பிறகு, மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணி வரை வாக்குப் பதிவு விறுவிறுப்படைந்தது.
மாலை 5 மணி வரை மாவட்டத்தில் 77.89 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வாக்குப் பதிவின் நிறைவில் மாவட்டத்தில் மொத்தம் 80.47 சதவீத வாக்குகள் பதிவானதாகக் கூறப்படுகிறது. இதன்படி, தொகுதிவாரியான வாக்குப் பதிவு சதவீதம்:
சோழந்தான் (தனி) - 87.10, திருமங்கலம் - 86.78, மேலூா் - 82.23, திருப்பரங்குன்றம் - 81.35, மதுரை கிழக்கு - 79.79, மதுரை தெற்கு - 78.26, மதுரை மேற்கு - 77.79, மதுரை மத்தியம் - 73.81, மதுரை வடக்கு - 72.63.
இருப்பினும், இறுதி வாக்குப் பதிவு சதவீதம் குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பை இரவு 10 மணி வரை மாவட்ட நிா்வாகம் வெளியிடவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 91% வாக்குப் பதிவு!

சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 80.43 சதவீதம் வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளா்கள் உற்சாகம்!

நீலகிரி மாவட்டத்தில் 78.90 சதவீதம் வாக்குப் பதிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

