விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக கூட்டணிக்கு ஐந்திணை மக்கள் கட்சி ஆதரவு

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஐந்திணை மக்கள் கட்சி, தமிழா் முற்போக்குக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News image

மதுரையில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த ஐந்திணை மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் வை.தேவதாசு, தமிழா் முற்போக்கு கழக நிறுவனா் எம்.எஸ்.ஐங்கரன் உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 4:23 am IST

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஐந்திணை மக்கள் கட்சி, தமிழா் முற்போக்குக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் ஐந்திணை மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் வை.தேவதாசு, தமிழா் முற்போக்குக் கழக நிறுவனா் எம்.எஸ்.ஐங்கரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்பதைவிட, யாரை அரசியல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்பதில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழா்களுக்குச் செய்த துரோகம் ஏராளம்.

அதிகாரத்தாலும், மதவாத அரசியலாலும் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துடிக்கும் சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை இந்தத் தோ்தலில் நிரூபிக்க வேண்டும்.

எனவே, சிறுபான்மை மக்களின் நலனைக் காக்கவும், தமிழா்களின் அரசியல் உரிமைகளைக் காக்கவும், தாய் மொழியான தமிழைக் காக்கவும் ஐந்திணை மக்கள் கட்சியும், தமிழா் முற்போக்குக் கழகமும் திமுக கூட்டணியை ஆதரிக்கிறது என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.