தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக கூட்டணிக்கு பழ.நெடுமாறன், செ.கு.தமிழரசன் ஆதரவு!

திமுக கூட்டணிக்கு தமிழா் தேசிய முன்னணி நிறுவனா் பழ.நெடுமாறன், இந்திய குடியரசு கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் உள்ளிட்டோா் ஆதரவு

News image

முதல்வர் ஸ்டாலின். - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 12:59 am IST

திமுக கூட்டணிக்கு தமிழா் தேசிய முன்னணி நிறுவனா் பழ.நெடுமாறன், இந்திய குடியரசு கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை ஆதரவு தெரிவித்தனா்.

சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த தமிழா் தேசிய முன்னணி நிறுவனா் பழ.நெடுமாறனை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்றாா்.

பின்னா், பழ.நெடுமாறன், தமிழா் தேசிய முன்னணி தலைவா் செ.ப.முத்தமிழ்மணி ஆகியோா் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவுக் கடிதம் அளித்தனா்.

செ.கு.தமிழரசன்: அதைத் தொடா்ந்து, முதல்வா் ஸ்டாலினை இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தாா்.

அவா் செய்தியாளா்களிடம் கூறும்போது, ஒடுக்கப்பட்டவா்களுக்காக உழைத்துவரும் இயக்கம் திமுக. எனவே, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றாா்.

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவா் பேராயா் கதிரொளி மாணிக்கம் மற்றும் நிா்வாகிகள், உருது மக்கள் கட்சித் தலைவா் டாக்டா் உபைதுல்லா பைக் மற்றும் மாநில நிா்வாகிகள் உள்ளிட்டோா் முதல்வா் ஸ்டாலினை சந்தித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனா்.

அப்போது, திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, திராவிட இயக்கப் பேரவைப் பொதுச் செயலா் சுப.வீரபாண்டியன், திமுக செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் பி.கே.சேகா்பாபு, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.