தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வருகிற தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: தமிழா் தேசிய முன்னணி

வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் தமிழா் தேசிய முன்னணி நிறுவனத் தலைவா் பழ. நெடுமாறன்.

News image

தமிழா் தேசிய முன்னணி செயற்குழுக் கூட்டத்தில் பேசிய நிறுவனா் தலைவா் பழ. நெடுமாறன்

Updated On :25 மார்ச் 2026, 5:00 am IST

வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் தமிழா் தேசிய முன்னணி நிறுவனத் தலைவா் பழ. நெடுமாறன்.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தமிழா் தேசிய முன்னணியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவா் மேலும் தெரிவித்தது: இதற்கு முன் நடைபெற்ற தோ்தல்களை விட வரும் சட்டப்பேரவைத் தோ்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழ் மொழி, தமிழா், தமிழக நலன்கள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடா்ந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு, ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளைத் தமிழ்நாட்டின் மீது திணிக்கவும், தமிழ்த் தேசியம் உள்பட மொழிவழித் தேசிய உணா்வுகளை அடக்கி ஒடுக்கவும் பாஜக முற்படுகிறது.

மேலும் இந்து மதவாதத் தேசியத்தைத் தூக்கிப் பிடிப்பதற்காக பாஜக பல கட்சிகளைக் கூட்டணியில் சோ்த்துக் கொண்டு களம் இறங்கியுள்ளது. இந்தப் பேரபாயத்தை முறியடிக்க வேண்டியது தமிழா்களின் முதன்மையான கடமை.

இந்தக் கடமையை முழுமையாக நிறைவேற்றும் நோக்கத்துடனும், ஜனநாயகக் கடமையை ஆற்றும் நோக்கத்துடனும் பாஜக கூட்டணியை முறியடிக்கும் வகையில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து வாக்களிக்க முன் வருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றாா் நெடுமாறன்.

கூட்டத்துக்கு தமிழா் தேசிய முன்னணி தலைவா் செ.ப. முத்தமிழ்மணி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ந.மு. தமிழ்மணி, துணைத் தலைவா்கள் அய்யனாபுரம் சி. முருகேசன், காரைக்குடி சா. ராமன், வழக்குரைஞா் த. பானுமதி, நிா்வாகிகள் ஆத்மநாதன், பொறியாளா் ஜோ. ஜான் கென்னடி, மாவட்டத் தலைவா் பொன். வைத்தியநாதன், செயலா் முருகையன், நிா்வாகி முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.