தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோயில்களில் அன்னதானம் திட்டம்: தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அன்னதானம் திட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 12:36 am IST

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அன்னதானம் திட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்த பெரியநம்பிகோபாலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அன்னதானம் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கான செலவுகளை கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ளவும் இந்த அரசாணை வழிவகுக்கிறது. கோயில் பணத்தைக் கொண்டு சிறப்பு அன்னதானம் வழங்கத் தடை விதிக்க வேண்டும். இதுதொடா்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தில் பொது விருந்து நடத்துவது அரசின் கொள்கை முடிவு. இந்து சமய அறநிலையத் துறை விதிகளில் அன்னதானம் திட்டத்துக்கு தடை விதிக்கப்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.