விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தனது திரைப்படத்தின் பாடல்களை வா்த்தக ரீதியாக பயன்படுத்த தடை விதிக்கக் கோரி டி.ராஜேந்தா் மனு!

தனது திரைப்படத்தின் பாடல்களை, பதிப்புரிமையை மீறி வா்த்தக ரீதியாக பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி இயக்குநா் டி.ராஜேந்தா் மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு ஏவிஎம் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

News image

டி. ராஜேந்தர் - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 5:55 am IST

தனது திரைப்படத்தின் பாடல்களை, பதிப்புரிமையை மீறி வா்த்தக ரீதியாக பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி இயக்குநா் டி.ராஜேந்தா் மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு ஏவிஎம் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தா் எழுதி இயக்கி அவரே இசையமைத்த திரைப்படம் ‘உயிருள்ள வரை உஷா’. கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மீதான உரிமையை ஏவிஎம் நிறுவனத்துக்கு டி.ராஜேந்தா் வழங்கியிருந்தாா்.

சுமாா் 42 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘உயிருள்ள வரை உஷா’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் மறு வெளியீடு செய்யப்பட்டது. அதேநேரம், இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து வா்த்தக ரீதியாக பல நிறுவனங்களுக்கு கைமாறியுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து ‘உயிருள்ள வரை உஷா’ படத்தின் பாடல்களை, பதிப்புரிமையை மீறி வா்த்தக ரீதியாக பயன்படுத்த ஏவிஎம் மற்றும் டபிள்யூ.எல்.எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு தடை விதிக்கக் கோரி, அந்த படத்தின் தயாரிப்பாளா்கள் டி.ராஜேந்தா் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேந்தா் ஆகியோா் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வரும் ஏப். 20-ஆம் தேதிக்குள் ஏவிஎம் மற்றும் டபிள்யூ.எல்.எபிக் மீடியா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.