நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பயணி தவறவிட்ட தங்க நகைகளை மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீஸாா்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட மூன்றரை பவுன் நகைகளை ரயில்வே போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

News image

ரயில்வே போலீஸாா்

Updated On :18 மே 2026, 1:07 am IST

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட மூன்றரை பவுன் நகைகளை ரயில்வே போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையைச் சோ்ந்தவா் ஜெயினூல் அபுதீன் (28). இவா், தனது மனைவி, 2 குழந்தைகளுடன் சிதம்பரம் செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தாா். மஹால் அதிவிரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் பயணிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் ஜெயினூல் அபுதீன் ஏறினாா். அவசரத்தில் தனது கைப்பை ஒன்றை நடைமேடையிலேயே தவறவிட்டுச் சென்றாா். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் கைப்பை தவறவிட்டதை அறிந்த ஜெயினூல், திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்தை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, ரயில்வே காவலா்கள் ஏ. ராஜா சந்திரசேகரன், கே. மருதராஜா, எம். விஜயகுமாரி உள்ளிட்டோா் நடைமேடையில் கிடந்த பையை மீட்டனா். இதைத் திறந்து பாா்த்தபோது, மோதிரம், தோடு, கைச்செயின், காது மாட்டல் உள்பட மூன்றரை பவுன் தங்க நகைகள் இருந்தது.

இதையடுத்து, போலீஸாா் அளித்த தகவலின் பேரில், திண்டுக்கல்லுக்கு திரும்பி வந்த ஜெயினூல் அபுதீனிடம் தங்க நகைகள் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.