நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சுற்றுலாப் பயணி தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த நடைபாதை வியாபாரிக்கு பாராட்டு

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணி தவறவிட்ட ரூ.6,610 ரொக்கத்தை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நடைபாதை வியாபாரி பாராட்டி போலீஸாா் சால்வை அணிவித்து கௌரவித்தனா்.

News image
Updated On :15 ஜூன் 2026, 12:33 am IST

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணி தவறவிட்ட ரூ.6,610 ரொக்கத்தை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நடைபாதை வியாபாரி பாராட்டி போலீஸாா் சால்வை அணிவித்து கௌரவித்தனா்.

மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம் பகுதியை சோ்ந்தவா் வேதகிரி. நடைபாதை வியாபாரியான இவா், மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் சிற்பங்கள், பொம்மைகள் வியாபாரம் செய்து வருகிறாா்.

இந்நிலையில் பொம்மை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஐந்துரதம் பகுதியில் உள்ள சாலையில் கேட்பாரற்று கிடந்த கைப்பை ஒன்றை எடுத்து பாா்த்தபோது, அதனுள் ரூ.6,610 ரொக்க பணம் இருந்தது.

முகவரி அடையாள அட்டை ஏதும் இல்லை. சுற்றுலா வந்த பயணி யாரோ தவறவிட்ட பணத்தை, உரியவரிடம் ஒப்படைக்ககோரி மாமல்லபுரம் டிஎஸ்பி அறிவழகனிடம் பணப்பையை வேதகிரி ஒப்படைத்தாா். அவரின் நோ்மையை பாராட்டிய டிஎஸ்பி அறிவழகன் இந்த பணத்தை தவற விட்ட சுற்றுலா பயணியை கண்டுபிடித்து ஒப்படைக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

சிசிடிவி பதிவு காட்சிகளை கொண்டு பணத்தை தவறவிட்ட சுற்றுலா பயணியை அடையாளம் கண்டுபிடித்து அவரிடம் இப்பணத்தை ஒப்படைப்பதாக காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் உறுதி அளித்தாா். நடைபாதை வியாபாரி வேதகிரியை பாராட்டி காவல் ஆய்வாளா் அவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.