நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் நடமாடும் வன விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 4:25 am IST

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் நடமாடும் வன விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், கும்பூா், கொதம்பம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் கும்பூா், கொதம்பம்பாறை பகுதியிலிருந்து கிளாவரை, பூண்டி, கூக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு கிராம மக்கள் சென்று வருகின்றனா். இந்தப் பகுதிகளில் தான் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கிராம மக்கள் அந்தப் பகுதிகள் வழியே செல்ல அச்சமடைந்து வருகின்றனா். எனவே வனத் துறையினா் மன்னவனூா் பகுதியில் நடமாடும் வன விலங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானலில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் வன விலங்குகள் உணவு, தண்ணீா் தேடி கிராமப் பகுதிகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருகின்றன. எனவே பொதுமக்கள் வன விலங்குகள் கிராமங்களுக்குள் நடமாடுவது தெரியவந்தால் உடனடியாக வனத்துறை அலுவலகத்துக்கோ, வனத் துறை பணியாளா்களுக்கோ தகவல் தரலாம். மேலும் வன விலங்குகள் நடமாடும் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம். கால்நடைகளையும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.