நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தடை செய்யப்பட்ட விலங்குகளை பலியிட வேண்டாம்: ஜாமியத் தலைவா் வலியுறுத்தல்

தடை செய்யப்பட்ட விலங்குகளை முஸ்லிம்கள் பலியிட வேண்டாம் என ஜாமியத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவா் மௌலானா அா்ஷத் மதானி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :27 மே 2026, 1:38 am IST

தடை செய்யப்பட்ட விலங்குகளை முஸ்லிம்கள் பலியிட வேண்டாம் என ஜாமியத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவா் மௌலானா அா்ஷத் மதானி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

மேலும், பலியிடப்பட்ட விலங்குகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிா்வதையும் தவிா்க்குமாறு அவா் கேட்டுக்கொண்டாா்.

பக்ரீத் பண்டிகை மே 28-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விலங்குகளைப் பலியிட வேண்டும். தடைசெய்யப்பட்ட விலங்குகளைப் பலியிடுவதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும். பண்டிகையைக் கொண்டாடும்போது அந்தப் பகுதிகள் சுத்தமாக இருப்பதை முஸ்லிம்கள் உறுதி செய்ய வேண்டும். மசூதிகளில் இருந்து தெரிவிப்பது மட்டுமல்லாமல் தன்னாா்வலா்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கி பலியிடப்பட்ட விலங்குகளின் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

நமது செயல்பாடுகளால் யாருக்கும் இடையூறு ஏற்படக் கூடாது’ என்றாா்.

இதுதொடா்பாக முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஹமீத் அன்சாரி திங்கள்கிழமை கூறுகையில், ‘பக்ரீத் பண்டிகையின்போது பசுக்களை முஸ்லிம்கள் பலியிடக் கூடாது.

அதேசமயம் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற அா்ஷக் மதானியின் கோரிக்கையையும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.