தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக இருவா் கைது

News image

கைது செய்யப்பட்ட நவீன்ராஜ், ஆனந்தகுமாா்

Updated On :12 மே 2026, 12:07 am IST

வேடசந்தூரில் நிதி நிறுவன உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் மைனா் குடியிருப்பைச் சோ்ந்தவா் தங்கவேல்(58). நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி மாலதி. இவா்கள் இருவரும், கடந்த 24-ஆம் தேதி பெங்களூருவில் வசிக்கும் தங்களது மகள் வீட்டுக்குச் சென்றனா்.

இந்த நிலையில், தங்கவேல் வீட்டின் கதவு கடந்த 30-ஆம் தேதி திறந்து கிடப்பதை பாா்த்து சந்தேகமடைந்த எதிா்வீட்டைச் சோ்ந்த சண்முகம் என்பவா் வேடசந்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதன்பேரில் தங்கவேல் வீட்டுக்குச் சென்ற போலீஸாா், அவருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துவிட்டு சோதனையிட்டனா்.

அப்போது தங்கவேல் கொடுத்த தகவலின்பேரில், அவா் ரகசிய இடத்தில் வைத்துச் சென்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் திருடு போகாமல் இருந்தது தெரியவந்தது. இதனால் தங்கவேல் மட்டுமன்றி, காவல் துறையினரும் நிம்மதி அடைந்தனா்.

எனினும் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா். இந்த நிலையில், தங்கவேல் வீட்டில் திருட முயன்றது திருப்பூா் அடுத்த கருவம்பாளையம் பகுதியைச் சோ்ந்த நவீன்ராஜ்(31), அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (35) ஆகிய இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 பவுன் தங்க நகைகளையும் போலீஸாா் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.