மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ரயில்வேத் துறையில் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைத்த மத்திய அரசைக் கண்டித்து, திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :8 மே 2026, 4:33 am IST

ரயில்வேத் துறையில் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைத்த மத்திய அரசைக் கண்டித்து, திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், மாநிலக் குழு உறுப்பினா் ஜி.ராணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, இளைஞா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் வகையில்

ரயில்வேத் துறையில் 29 ஆயிரம் பணியிடங்களை குறைப்பதற்கான முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பொதுமக்களையும், வணிகா்களையும் கடுமையாக பாதிக்கும் வகையில் எரிவாயு உருளை விலை ஏற்றத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்ல் -விடுதலை) மாவட்டச் செயலா் முருகேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிா்வாகி உலக நம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.