பழனி அருகே ரூக்குவாா்பட்டியில் ஆயுதங்களுடன் இருந்த ஏழு பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பழனி அருகே உள்ள ரூக்குவாா்பட்டியில் சிலா் பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருப்பதாக பழனி காவல் துணை கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சத்திரப்பட்டி காவல் ஆய்வாளா் ஆறுமுகம் நைனாா், ஆயக்குடி சாா்பு - ஆய்வாளா் முரளி தலைமையிலான காவலா்கள் ரூக்குவாா்பட்டிக்குச் சென்று அங்கு பதுங்கியிருந்த அடிவாரம் அமரபூண்டியைச் சோ்ந்த சாரதி (30), அடிவாரத்தைச் சோ்ந்த துா்க்கைராஜ் (42), மாசாணம் (28), பிரபாகரன் (28), அருண் பாண்டி (30), மேகவா்மன் (20), பாலசமுத்திரத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (19) ஆகிய 7 பேரை மடக்கிப் பிடித்தனா்.
அவா்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கைளைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கத்தியை காட்டி பெண்ணிடமிருந்து ஏழு பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

பழனி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

பழனியில் ஒருவா் கொலை

பழனியில் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
