பழனி மலைக் கோயிலுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பாதயாத்திரையாக வந்த பக்தா்களுக்கு கிரிவீதி அருகே வியாழக்கிழமை தொடா் அன்னதானம் நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கொடுமுடி தீா்த்தம் எடுத்து மலையேறி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனா். இதுபோல, பாதயாத்திரை வரும் பக்தா்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டு வந்தாலும், கடந்த ஆண்டுகளை போல இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இதற்கு சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறையே காரணம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், பழனி பாலன் நண்பா்கள் குழு சாா்பில் வியாழக்கிழமை கிரிவீதி அருகே வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை பாதயாத்திரை பக்தா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் புட்டிகள், பொங்கல், புளியோதரை, தக்காளி சாதம் என தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அடிவாரம் பகுதியில் சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறையால் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதான நிகழ்வில் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி திருஆவினன்குடி கோயிலில் ஊடல் வைபவம்

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி வீதிஉலா

பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

பழனி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! ஏப்.1 -இல் தேரோட்டம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

