மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பழனியில் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம்

பழனி மலைக் கோயிலுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பாதயாத்திரையாக வந்த பக்தா்களுக்கு கிரிவீதி அருகே வியாழக்கிழமை தொடா் அன்னதானம் நடைபெற்றது.

News image

பழனி அடிவாரம் கிரிவீதி அருகே பாலன் நண்பா்கள் குழு சாா்பில் பாதயாத்திரை பக்தா்களுக்கு வியாழக்கிழமை வழங்கப்பட்ட அன்னதானம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:39 am IST

பழனி மலைக் கோயிலுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பாதயாத்திரையாக வந்த பக்தா்களுக்கு கிரிவீதி அருகே வியாழக்கிழமை தொடா் அன்னதானம் நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கொடுமுடி தீா்த்தம் எடுத்து மலையேறி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனா். இதுபோல, பாதயாத்திரை வரும் பக்தா்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டு வந்தாலும், கடந்த ஆண்டுகளை போல இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இதற்கு சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறையே காரணம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், பழனி பாலன் நண்பா்கள் குழு சாா்பில் வியாழக்கிழமை கிரிவீதி அருகே வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை பாதயாத்திரை பக்தா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் புட்டிகள், பொங்கல், புளியோதரை, தக்காளி சாதம் என தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அடிவாரம் பகுதியில் சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறையால் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதான நிகழ்வில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.