விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

8 நாள்கள் சோதனையில் ரூ.43 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :24 மார்ச் 2026, 1:18 am IST

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 8 நாள்களாக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் ரூ.43 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், என்.பஞ்சம்பட்டி அருகே நிலை கண்காணிப்புக் குழுவினா் நடத்திய வாகனச் சோதனையின்போது, ரூ.1.21 லட்சம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ரூ.91,500 பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் திங்கள்கிழமை மாலை வரை மொத்தம் ரூ.43.12 லட்சம் ரொக்கம், ரூ.47ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.