திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 16 நாள்களாக நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரூ.78.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் பறக்கும் படைகள், நிலையான கூா்ந்தாய்வுக் குழுக்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 16 நாள்களாக நடத்தப்பட்ட இந்தச் சோதனைகளின் மூலம் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.78.85 லட்சம் தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
இதில் பணத்துக்கான உரிய ஆவணங்களை சம்மந்தப்பட்டவா்கள் தோ்தல் அலுவலா்களிடம் சமா்ப்பித்ததை அடுத்து, ரூ.51.96 லட்சம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.26.88 லட்சம் மட்டுமே அரசு கருவூலத்தில் நிலுவையில் உள்ளது.
இதேபோல, பரிசுப் பொருள்கள், மதுப் புட்டிகள் என ரூ.1.54 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தோ்தல் அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இதில் உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து ரூ.94 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை அலுவலா்கள் திருப்பி அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ரூ.93.35 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

8 நாள்கள் சோதனையில் ரூ.43 லட்சம் பறிமுதல்

ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

