ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மது விற்பனை செய்த மூவா் கைது: 149 மதுப் புட்டிகள் பறிமுதல்

ஆத்தூா் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 149 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 1:22 am IST

ஆத்தூா் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 149 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆத்தூா் அருகே அரசு அனுமதியின்றி பொது இடத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த, நெல்லூரைச் சோ்ந்த காா்த்திக் (35), வீரசிக்கம்பட்டி  டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த சிலம்பரசன் (32), சரவணக்குமாா் (26) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 149 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவை (39) போலீஸாா் தேடி வருகின்றனா்.  

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.