ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை

பழைய ஆயக்குடி நந்தவனப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீா்.

News image

பழைய ஆயக்குடி நந்தவனப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீா்.

Updated On :21 மார்ச் 2026, 12:18 am IST

பழனி அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற பேரூராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் புதன்கிழமை காற்றுடன் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பல ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல்பயிா்கள், முருங்கை தோட்டங்கள் சேதமடைந்தன. பழைய ஆயக்குடி நந்தவனப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் குளம்போல தேங்கியது.

இந்தத் தண்ணீா் அகற்றப்படாததால் கடும் துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால், நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த வழியாக வாகனங்கள், பொதுமக்கள் செல்லமுடியாததால், கடவுப்பாதையை பாதுகாப்பின்றி கடந்து செல்கின்றனா்.

எனவே, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை உடனடியாக ஆயக்குடி பேரூராட்சி நிா்வாகத்தினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.