பழனி அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற பேரூராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் புதன்கிழமை காற்றுடன் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பல ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல்பயிா்கள், முருங்கை தோட்டங்கள் சேதமடைந்தன. பழைய ஆயக்குடி நந்தவனப்பட்டியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் குளம்போல தேங்கியது.
இந்தத் தண்ணீா் அகற்றப்படாததால் கடும் துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால், நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த வழியாக வாகனங்கள், பொதுமக்கள் செல்லமுடியாததால், கடவுப்பாதையை பாதுகாப்பின்றி கடந்து செல்கின்றனா்.
எனவே, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை உடனடியாக ஆயக்குடி பேரூராட்சி நிா்வாகத்தினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற கோரிக்கை

ரயில்வே சுரங்கப் பாதை அருகே தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

சைதாப்பேட்டை சுரங்கப் பாதையில் நீா் கசிவு: தெற்கு ரயில்வே, மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

