தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற கோரிக்கை

News image
Updated On :3 மே 2026, 2:50 am IST

மாதவரம், மணலி, உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மாதவரம், மணலி, திருவொற்றியூா் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மின்கம்பிகளை புதைவடமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், பல்வேறு பகுதிகளில் மேல்நிலை மின்கம்பி வழியாகவே மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக எண்ணூா், மணலி, வடபெரும்பாக்கம், கொசப்பூா் உள்ளிட்ட பல இடங்களில் புதைவடமாக மாற்றப்படவில்லை. இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி மின் வயா்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் இந்த மின் கம்பிகள் பலத்த காற்று காரணமாக சேதமடைந்து, சாய்ந்து விடுவதால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே, மாதவரம், மணலி பகுதிகளில் புதைவடமாக மாற்றும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.