தேனி அருகே முத்துதேவன்பட்டியில் சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இங்கு சுமாா் 17 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இந்த பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் முத்துத்தேவன்பட்டி முருகன் தெருவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு, சுகாதார வளாகம் கட்டப்பட்டு, அதை இந்தப் பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இதனிடையே சுகாதார வளாகம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதேபோல, இங்குள்ள கழிவுநீா்த் தொட்டியும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சுகாதார வளாகம், தொட்டியை சீரமைக்க வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

வெள்ளக்கோவிலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரையை சீரமைக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
