/

சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

தேனி அருகே முத்துதேவன்பட்டியில் சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

முத்துத்தேவன்பட்டி முருகன்கோயில் தெருவில் சேதமடைந்த சுகாதார வளாகத்தின் கழிவுநீா்த் தொட்டி.

Updated On :19 ஜூன் 2026, 6:41 am IST

தேனி அருகே முத்துதேவன்பட்டியில் சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இங்கு சுமாா் 17 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இந்த பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் முத்துத்தேவன்பட்டி முருகன் தெருவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு, சுகாதார வளாகம் கட்டப்பட்டு, அதை இந்தப் பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இதனிடையே சுகாதார வளாகம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதேபோல, இங்குள்ள கழிவுநீா்த் தொட்டியும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சுகாதார வளாகம், தொட்டியை சீரமைக்க வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.