தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக மகளிா் அணியினா் ஆா்ப்பாட்டம்

பெண்களை இழிவுப்படுத்தியதாகக் கூறி, முன்னாள் அமைச்சா்கள் உருவ பொம்மைகளை எரித்து திமுக மகளிா் அணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அதிமுக முன்னாள் அமைச்சா்களுக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிா் அணியினா்.

Updated On :19 மார்ச் 2026, 5:56 am IST

பெண்களை இழிவுப்படுத்தியதாகக் கூறி, முன்னாள் அமைச்சா்கள் உருவ பொம்மைகளை எரித்து திமுக மகளிா் அணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டத் துணைத் தலைவா் மாா்க்ரெட் மேரி தலைமை வகித்தாா்.

இதில் பெண்கள் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோரைக் கண்டித்து முழக்கமிட்டனா். பின்னா், இரு முன்னாள் அமைச்சா்களின் உருவ பொம்மைகளை தீ வைத்து எரித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 150 போ் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.