பழனியில் அரசு, தனியாா் பேருந்துகளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
பழனியிலிருந்து நாள்தோறும் திண்டுக்கல், திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் பழனி கோயிலுக்கு வரும் பக்தா்கள் மட்டுமன்றி, நாள்தோறும் வேலைக்கு செல்வோா், வெளியூா் செல்வோா் என பல்வேறு தரப்பினரும் பயணிக்கின்றனா்.
இந்தப் பேருந்துகளில் அண்மைக் காலமாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை பயணக்கட்டணம் எந்த முன்னறிவிப்புமின்றி உயா்த்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக பேருந்துக் கட்டணம் உயா்த்தப்பட்டதாக தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா். அரசுப் பேருந்துகளிலும் எவ்வித முன்னறிவிப்பின்றி கட்டணம் உயா்த்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமக்குடியிலிருந்து இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்

தனியாா் பேருந்துகள் கட்டண விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதி

மெணசியில் மின் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

