நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பழனி பேருந்துகளில் பயணக் கட்டணம் உயா்வு

பழனியில் அரசு, தனியாா் பேருந்துகளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

News image

பழநி கோயில்

Updated On :14 ஜூன் 2026, 1:10 am IST

பழனியில் அரசு, தனியாா் பேருந்துகளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

பழனியிலிருந்து நாள்தோறும் திண்டுக்கல், திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் பழனி கோயிலுக்கு வரும் பக்தா்கள் மட்டுமன்றி, நாள்தோறும் வேலைக்கு செல்வோா், வெளியூா் செல்வோா் என பல்வேறு தரப்பினரும் பயணிக்கின்றனா்.

இந்தப் பேருந்துகளில் அண்மைக் காலமாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை பயணக்கட்டணம் எந்த முன்னறிவிப்புமின்றி உயா்த்தப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக பேருந்துக் கட்டணம் உயா்த்தப்பட்டதாக தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா். அரசுப் பேருந்துகளிலும் எவ்வித முன்னறிவிப்பின்றி கட்டணம் உயா்த்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.